iyarkaiyin vannankal

இயற்கையின் வண்ணங்கள்

ஒரு சிறந்த கலைஞர் இயற்கையின் வண்ணங்களுடன் விளையாடுகிறார்

- Srimathi Kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நீல நிற வண்ணத்துப்பூச்சி சிறகை மெதுவாக அசைத்ததை நான் பார்த்தேன்.

ஒரு மஞ்சள் நிற தேனீ தேநீர் குடிப்பதைப் பார்த்தேன்.

ஓர் பாத்திரத்தில் ஒரு சிவப்பு மீனைப் பார்த்தேன்.

.ஒரு பச்சை நிற தவளை ஒரு நாய் குட்டியுடன் விளையாடுகிறது.

ஒரு ஆரஞ்சு நிற வாத்து எனக்கு நல் வாழ்த்துக்கள் கூறியது.

நான் ஒரு கம்பளி பூச்சி ஊதா நிற பூவுடன் நடனம் ஆடுவதைப் பார்த்தேன்

ஒரு கறுப்பு சாம்பல் நிற பூனை ஆரஞ்சு தொப்பி அணிந்து  இருப்பதைப் பார்த்தேன்.

ஒரு சாம்பல் பழுப்பு நிற சுண்டெலி ஒரு இளஞ்சிவப்பு வீட்டில் மறைந்து உள்ளது.

நான் ஒரு சிவப்பு மற்றும் கறுப்பு நிற நரி ஊதா நிற காலுறை அணிந்து இருப்பதை பார்த்தேன்.

நான் ஒரு பச்சை நிற வெட்டுக்கிளி கறுப்பு மற்றும் வெள்ளை செய்தித்தாள் வாசிப்பதைக் கண்டேன்.

ஒரு கறுப்பு மற்றும் ஊதா நிற ஆடு ஒரு சிவப்பு படகில் பயணம் செய்வதை நான் பார்த்தேன்

ஒரு பச்சை மற்றும் பழுப்பு முதலை எனக்கு ஒரு பெரிய புன்னகை கொடுத்தது.

ஒரு கருப்பு மற்றும் நீல பாம்பு கேக் துண்டு சாப்பிடுவதை நான் பார்தேன்.

ஒரு சிவப்பு மற்றும் மஞ்சள் கோழி ஒரு பேனாவால் எழுதுவதை நான்  பார்த்தேன்.

ஒரு கருப்பு மற்றும் ஆரஞ்சு புலி தண்ணீரில் நிற்பதை நான் காண்கிறேன்.

என் இரண்டு கருப்பு கண்களால் எல்லா வண்ணங்களும் பறப்பதை நான் காண்கிறேன்.