kaadu kan thirakkumpothu

காடு கண் திறக்கும்போது

உற்சாக முழக்கத்தோடு கதிரவன் துள்ளி எழ, ஒரு புத்தம் புதிய நாளை காடு கண் திறந்து வரவேற்கிறது. ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சியை அது அரங்கேற்றுகிறது. இன்று காடு எப்படி இருக்கும்? கோண்ட் எனும் பழங்குடி மக்களின் நம்பிக்கையான ஆன்மவாதத்தில் (animism) உந்துதல் பெற்று இக்கதை எழுதப்பட்டுள்ளது. கதிரவனில் தொடங்கி மரம், செடி, பாறை முதலிய அனைத்துப் பொருட்களுக்கும் மனிதர்களைப் போலவே உயிர் கொண்டிருப்பவை என்பதே அந்த நம்பிக்கையின் சாரமாகும்.

- Vishal Raja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குறட்டைவிடும் குன்றுக்கு பாறை முதுகு

முதுகின் பின்னால் கதிரவன் துள்ளி எழுகிறான்.

பிரகாசமான காலையில் கம்பீரமாய் நுழைகிறான்.

காற்று படபடத்து பாடுது, வட்டமிட்டு ஆடுது.

நிலம் மேலே கதிர் நடக்கும்போது மண்ணோ புரளுது, வண்ணங்களாய் திரளுது.

மரங்கள் பேசும் ரகசியங்களை மண்ணுக்கடியே புதைந்திருக்கும் பலகோடி தூதுவர்கள் சுமந்து போகிறார்கள்.

கதிரொளியை அள்ளி விழுங்க மரக்கிளைகள் வாயை அகலத் திறக்கிறார்கள்.

கதிரவனைக் காணவில்லை! பெரிய சாம்பல் வண்ண மேகங்கள் பின்னே சென்று ஒளிந்துகொண்டான்.

மேகத்திரளும் வெடித்துப் பொழிகிறது மழையாய் நீரில் நிறைகின்றன மரங்கள்.

மேகத்திரளை காற்று விலக்கித் தள்ள, வானில் நீலம் தெளிகிறது. இனிய நதியாக நீரும் திரண்டு கீழே வழிகிறது.

அந்தி வந்ததும் வானம் அழகு வண்ணங்கள் சூடிப் பறக்கிறது.

பறவைகள் மீண்டும் மலர்களிடம் செல்கின்றன. மலர்களின் நிறங்களுக்கு நன்றி சொல்கின்றன.

உறக்கம் பூத்து இருண்ட இராப்பொழுது கதிரவன் மேல் கவிகிறது.

காடு ஒரு புதிய நிகழ்ச்சிக்கு ஒரு புதிய நாளுக்கு தயாராகிறது.

தொடுவானத்தின் எல்லையில் மிதக்கிறான் கதிரவன், அவனுக்கும் நமக்கும் எப்போதுமே தூரம் இல்லை.