kundu raja olli naai

குண்டு ராஜா ஒல்லி நாய்

குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் என்ன ஆனார்கள்

- Thamizhini Senthilkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர் ஒரு குண்டு ராஜா.

அந்த குண்டு ராஜா ஒரு ஒல்லி நாய் வைத்திருந்தார். குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் நடந்து சென்றார்கள்.

அந்த நாய் ஒரு குருவியை பார்த்தது. அந்த நாய் குருவியைத் துரத்திச் சென்றது.

அந்த ராஜா நாயின் பின்னாடி ஓடினார்.

அவர்கள் ஓடினார்கள் ஓடினார்கள். பல நாட்கள் ஓடினார்கள்.

அந்த ராஜா நாயை பிடித்தார்.

இப்போது குண்டு ராஜா ஒல்லி ராஜாவாகிவிட்டார்.