naam cricket vilaiyaadalaam

நாம் கிரிக்கெட் விளையாடலாம்

ரோஹனும் சீமாவும் விரைவில் கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். அவர்கள் அவர்களுடைய எல்லா நண்பர்களையும் சேர்த்தால் 11 பேர் கிடைப்பார்களா?

- Arjun G

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரோஹன், எழுந்திரு. நமக்கு வேலை இருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் நாம் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். நாளை டால் டவர்ஸ் பள்ளிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுகிறோம். நாம் 11 வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நமக்கு பந்து வீசக்கூடிய ஐந்து பேர் தேவை. பேட்டிங் செய்யக்கூடிய ஐந்து பேர் தேவை.

ஐந்து கூட்டல் ஐந்து என்பது பத்து ஆகும்.

5 + 5 = 10

ஒரு கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். நீ விக்கெட் கீப்பரை மறந்துவிட்டாய்.

பத்தும் ஒன்றும் பதினொன்றாகும். 10 + 1 = 11

நான் என் மூன்று நண்பர்கள் - குயிக் மில்லி, ஃபன்னி மீரா மற்றும் ஹங்கிரி ஹசீனா ஆகியோரை அழைக்க முடியும். நீ இரண்டு நண்பர்களை அழைக்கலாம் - ஸ்னீசி சூரஜ் மற்றும் ஹேப்பி ஹுசைன்.

அது எத்தனை பேர்?

மூன்று கூட்டல் இரண்டு ஐந்து ஆகும்.

3 + 2 = 5

எப்பொழுதும் படிக்கும் அந்த இரண்டு உயரமான பையன்கள், ஆல்பர்ட்டையும் பின்டோவையும் கூப்பிடலாம்.ஹசீனாவின் மூத்த சகோதரர் மொஹ்சின் மற்றும் மீராவின் தங்கை, மாயாவிடம் கேட்கலாம்.

அது எத்தனை பேர்?

இரண்டு கூட்டல் ஒன்று கூட்டல் ஒன்று நான்கு ஆகும்.

2 + 1 + 1 = 4

முதலில் நமக்கு ஐந்து பேர் இருந்தனர்.

பின்னர் நான்கு பேர் இணைந்தனர்.

ஐந்து கூட்டல் நான்கு ஒன்பது ஆகும்.

5 + 4 = 9

நமக்கு வேறு யாரும் இல்லை என்று நீ ஏன் சொல்கிறாய்? நான் நமது அணியின் அங்கம். என்னை போல் யாரும் பேட் சேய்ய முடியாது.

ஒன்பது கூட்டல் ஒன்று பத்து ஆகும் .

9 + 1 = 10

நீ அணியின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லையா?

பத்தும் ஒன்றும் பதினொன்றாகும்.

10 + 1 = 11

எங்கள் கிரிக்கெட் அணி தயாராக உள்ளது.

இப்போது பந்து வீச்சைப் பயிற்சி செய்யுங்கள்.

நாம் வெற்றி பெற வேண்டும்.