neer nilaigal

நீர் நிலைகள்

மழை நீர் இன்றி நிறைய உயிரினங்கள் அவதிப்பட்டன.

- R. Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு ஊரில் அழகான நீர் நிலை இருந்தது. அதில் பல நீர் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.

அங்குள்ள மக்களுக்கு அந்த நீர் நிலைகள் மிகுந்த உதவியாக இருந்தது.

மக்கள் அந்த நீர் நிலைகளிலிருந்து தான் நீர் எடுத்து செல்ல வேண்டும்.

சிலர் வீட்டு அருகில் கிணறுகளை கட்டி அதிலிருந்து நீர் எடுத்தனர்.

அந்த நீர் தான் அவர்களுக்கு அமிர்தம்.

சில காலம் சென்று விட்டது.  பிறகு மழை வருவது வர வர குறைவாகி விட்டது.

பல ஏரிகளிலும் கிணறுகளிலும் நீர் வரத்து குறைவாகி விட்டது.

நிறைய உயிரினங்கள் அவதிபட்டன.

அதனால் மழை நீரை தகுந்த முறையில் சேமிப்போம்.