poonai tholaitha roti

பூனைத் தொலைத்த ரொட்டி

3 பூனைகள் எப்பொழுதும் தங்களுக்கு 3 பெரிய ரொட்டிகள் கொண்டு சுவையான இரவு சாப்பாடு உண்ணுவார்கள். ஆனால் ஒரு நாள் அவர்களுடைய சுவையான ஒரு ரொட்டியைக் காணவில்லை. அடுத்த நாள், அதே சம்பவம் நடந்தது! உங்களால் அந்த திருடனைக் கண்டு பிடித்து உதவ முடியுமா?

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு காலத்தில், மூன்று பூனைகள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தன. அவர்களின் பெயர் - கருப்புப் பூனை, நீலப் பூனை மற்றும் பச்சைப் பூனை.

ஒவ்வொரு மாலையும் இரவு சாப்பாட்டிற்கு பின், நீலப் பூனை மூன்று பெரிய ரொட்டிகளை வாட்டி வைக்கும்.

அடுத்த நாள் காலை, எல்லாப் பூனைகளும் ரொட்டி, பால் மற்றும் கஞ்சி  உண்ணுவது வழக்கம்.

ஒரு நாள் காலை, இரண்டு பெரிய ரொட்டி துண்டுகள் மட்டுமே இருந்தது!

அடுத்த நாள் காலை, இன்னும் ஒரு பெரிய ரொட்டியைக் காணவில்லை!

"என்ன செய்வது?" என்று வியந்தது. "இங்கே ஒரு திருடன் இருக்க வேண்டும்."

"நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரவும் ரொட்டிகளைப் பாதுகாக்கலாம்,"  என்று ஆலோசனை கூறியது கருப்புப் பூனை.

ஆனால் நிறைய சாப்பிட்டு அன்று இரவு அனைவரும் தூங்கி விட்டனர்.

யாருமே ரொட்டிகளை பாதுகாக்கவில்லை.

அதே போல மறுநாள் இரவும் நடந்தது.

மறுபடியும், ஓவ்வொருவரும் ஒவ்வொரு இரவும் ரொட்டிகளைப் பாதுகாக்க முடிவு செய்தன, மறுபடியும் தூங்கி விட்டன!

இது போல பல நாட்கள் சென்றது, திருடனும் பிடிபடவில்லை.

ஒரு நாள், கருப்புப் பூனை சுத்தப் படுத்தி கொண்டிருந்தது. ஓ! ஒரு சிறிய துளையைக் கட்டிலின் கீழ் கண்டது.

"யாரு தோண்டியத் துளை இது?" என்று வியப்பில் ஆழ்ந்தது.

"இங்க வந்து பாருங்க!" கருப்புப் பூனை மற்ற பூனைகளை அழைத்தது.

"இந்த துளை வழியாக தான் திருடன் வருகிறான் என்று நினைக்கிறேன்."

"நாம் அவனைப் பிடிக்க வேண்டும்!" என்று அனைவரும் ஒருமித்த குரலில் கரைந்தன.

அன்று மாலை, நீலப் பூனை மூன்று பெரிய ரொட்டிகளை வாட்டி வைத்தது.

பிறகு, மூன்று பூனைகளும் அறைக்குள் ஒளிந்து இருந்தன.

நடு இரவில், ஒரு பெரிய மஞ்சள் எலி துளை வழியாக துள்ளி வந்தது. மெதுவாக பதுங்கி மேசை மேலே ஏறி பெரிய ரொட்டிகளை நோக்கி சென்றது.

உடனே, ஒளிந்து இருந்த பூனைகள் எலியை நோக்கி பாய்ந்தன.

"பிடிச்சிட்டோம்!" என்று கூச்சல் இட்டன. "எங்கள் ரொட்டியை எங்களிடம் கொடு!"

பிடித்த எலியை மேசை மீது வைத்து தங்களுக்கு விளக்கம் கேட்டன. எலி, பயத்தில் விழி பிதுங்கிய நிலையில் இருந்தது.

"எனக்கு உடம்பு சரியில்லை, அதனால் உணவு வாங்க முடியவில்லை," என்று எலி பூனைகளிடம் கூறியது.

"என்னுடைய குட்டிகள் பசியில் இருக்கின்றன, இந்த ரொட்டியை அவர்களுக்கு உணவாக சாப்பிடக் கொடுப்பேன்."

அந்த எலி தன்னுடைய பலவீனமான குட்டிகளைக் காட்டியது. அவை வலுவற்று சோகமாக இருந்தன.

அடுத்த நாள், நீலப் பூனை நிறைய பெரிய ரொட்டிகளை வாட்டி வைத்தது. அந்த நீலப் பூனை சமைத்தது எல்லாப் பூனைகளுக்கும், எல்லா எலிகளுக்கும், எல்லா எலிக் குட்டிகளுக்கும் போதுமானதாக இருந்தது.

பூனைகளும் எலிகளும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக உணவை உண்டு மகிழ்ந்தனர்.