porumaiyana aadu

பொறுமையான ஆடு

எஜமான் கோபப்பட்ட போது பொறுமையாக இருந்த ஆடு

- R. Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உழவர் ஒருவர் வீட்டில் ஆடுகள் இரண்டு இருந்தன. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும்.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன.ஆனாலும் அவன் சரியாக சாப்பாடு போடுவதில்லை.

ஒருநாள் அவை தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை கடித்து சாப்பிட்டன.அதை கண்டு கோபமடைந்த உழவர் நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக்கூடாது.

இருந்தால் உங்களை கொன்று விடுவேன்.நீங்கள் எங்காவது போய்விடுங்கள் என்று விரட்டினார்.

மேய்ச்சலை தேடி போய் கொண்டிருந்த வேலையில் அந்த ஆடுகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.

பிறகு அனைவரும் ஒன்றாக மேய்ச்சலை தேடி சென்றனர்.

மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதில் ஒரு ஆடு தன் எஜமான் தன்னை துரத்திவிட்டார் என்ற ஏக்கத்தில் மிகுந்த வருத்தமாக இருந்தது.

பின் மேய்ச்சலை தேடி சென்றது.‌ நேரத்திற்கு வீட்டுக்கு வந்தன. முதலாளி தன் தவறை நினைத்து வருத்தப்பட்டார். ஆடுகளை நன்றாக பார்த்துக் கொண்டார்.