taraavin natchathirangal

தாராவின் நட்சத்திரங்கள்

உங்களுக்கு நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே தூங்கப் பிடிக்குமா? தாராவுக்குப் பிடிக்கும். அவளுடன் ஒரு உற்சாகமிக்க பயணம் போக வருகிறீர்களா?

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாராவால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. இரயில் மிக மெதுவாகப் போவது போல இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தாள். தூரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல்களில் வெளிச்சம் மின்னியது.

எல்லோரும் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிரயாணி தாராவிடம், ”பேட்டி! நீ ஒன்றும் வீட்டைவிட்டு ஓடிவரலயே?” என்று கேட்டார்.

”இல்லை, இல்லை!” என்றாள் தாரா. விடியற்காலையில் தாரா மீனாப்பூரில்  இறங்கினாள்.

அவள் கங்கை ஆற்றை நோக்கி நடந்து, ஒரு நெரிசல் மிகுந்த படகில் ஏறிக் கொண்டாள். ‘தனியாக பிரயாணிக்கும் இந்தப் பெண் யாராக இருக்கும்?’ என்று படகில் இருந்த பலரும் வியந்தனர். படகிலிருந்து இறங்கும்போது படகோட்டி, ”வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டாயா, என்ன?” என்று கேட்டார்.

தாரா புன்னகையுடன், “ இல்லை, இல்லை, நான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

தாரா ஒரு காட்டுக்குள் வந்தாள். கேமராவை எடுத்தாள். ஒரு மான் அவளைப் பார்த்தது. அது, ‘நீ இங்கே என்ன செய்கிறாய்’ என்று கேட்பதைப் போலிருந்தது. தாரா கேமராவை சரியாக வைத்து அதைப் படம் பிடித்தாள்.

‘”நான் வீட்டிற்கு வந்திருக்கிறேன், என் அருமை மானே! என் மூதாதையரின் ஊருக்கு வந்திருக்கிறேன்.”

சூரியன் மறையும்போது தாரா ஒரு கயிற்றுப் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்தாள். அவள் எடுத்து வைக்கும் காலடிகளுக்குத் தக்கவாறு பாலம் லேசாக ஆடியது.

பாலத்தின் மறுமுனையில் என்ன காத்திருக்கிறது என்பதை நினைத்தபோது தாரா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

பாலத்தைக் கடந்து வந்ததும் தாரா நின்றாள். தன் மேப்பை எடுத்து முன்னே செல்ல வேண்டிய பாதையை ஆராய்ந்தாள். கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தாள்.

ஆகா..பசுமையான மரங்கள், செடிகளின் வாசனை மிக நன்றாக இருந்தது!

தாரா சிறிதாக நெருப்பை வளர்த்தாள். கொண்டு வந்திருந்த உணவை உண்டாள். பின்னர், வானத்தின் கீழே படுத்து ஓய்வெடுத்தாள். நட்சத்திர நண்பர்கள் கண் சிமிட்டினார்கள். நாளை நடந்து இந்தக் காட்டைக் கடக்க வேண்டும். பின்னர் பஸ் பிடித்து அவள் தாத்தா,பாட்டி வசிக்கும் ஊரை அடைய வேண்டும்.

இப்போதைக்கு, பிரபல வனஉயிர் புகைப்படக் கலைஞரான தாரா பிரகாஷ் , நட்சத்திரங்களுக்குக் கீழே தூங்கிக்கொண்டே வீட்டைப் பற்றி கனவு காணப் போகிறார்.

அன்புள்ள வாசகரே,

நீங்கள் நட்சத்திரங்களை எண்ணியதுண்டா? எத்தனை நட்சத்திரங்களை உங்களால் எண்ணமுடியும் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் காட்டில் தனியாக இருக்க நேர்ந்தால், உங்களிடம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சில பொருட்களை சொல்ல முடியுமா?

மாதத்தின் எந்தெந்த நாட்களில் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடியும்? ஏன்?

#6FrameStoryChallenge: A Carnival of Art

The illustrations in this book were created as part of the #6FrameStoryChallenge, an online campaign run by Pratham Books to build a rich bank of illustrations for StoryWeaver. The essence of the #6FrameStoryChallenge was to tell a good story using just 6 illustrations.

The campaign inspired nearly 70 illustrators to donate their time and skills to India’s first open-source story-publishing platform for children. What started out as an experimental campaign soon blossomed into a carnival of art, birthing nearly 500 new illustrations.

These wordless narratives cut across language barriers, opening up a world of possibilities, encouraging StoryWeaver’s growing community to dream up multiple stories around these images. The #6FrameStoryChallenge is a powerful reminder of the need for collaboration, to get closer to our mission: “A Book in Every Child’s Hand.”